கல்லூரி மாணவர்களுக்கு இலவச நாள்தோறும் 2ஜிபி டேட்டா கார்டு- முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு

 

கல்லூரி மாணவர்களுக்கு இலவச நாள்தோறும் 2ஜிபி டேட்டா கார்டு- முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு


    தமிழக அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நாள்தோறும் 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா லாக்டவுனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே சட்டசபை தேர்தலும் நெருங்கிவிட்டது.

    இந்த நிலையில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாள்தோறும் 2ஜிபி டேட்டா கார்டு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் 9.69 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் பயனடைவர்.


Post a Comment

0 Comments